இதம் என்றால் என்ன?

 

Artist: Felix Vallotton


புற்கள் ஒளியில் சலசலக்கின்றன

நாரைகளும் கொக்குகளும்

பசும்செறிவினின்று சிதறிப்பறக்கின்றன

நான்

இம்மாலைப்பொழுதின் 

பச்சைப் பசேலென்ற

அமைதிக்கு நடுவே

கொஞ்சநேரம் கழித்து என

பத்திரப்படுத்திவைத்திருந்த

இனிப்பு மிட்டாய்களிடையே

திடுமென உன்னை

என் சட்டைப்பையில் தேடிப்பார்க்கின்றேன்.

*

Comments

  1. நினைவென்னும் இனிப்பு மிட்டாய், அழகிய சொல்லாடல். உங்களின் சொல்வீச்சு அபாரம். நல்ல கவிதை.

    ReplyDelete

Post a Comment