நடனம்



காகங்களின் கண்கள் வழியே

காகங்கள் மட்டும் பார்க்காத

ஒரு நண்பகல் நேரம்

சாலை காலியாக இருந்தது

வண்டியை முடுக்கிக்கொண்டு வந்தவன்

திடுமென நிதானித்துச்

சற்று வழிவிடுகிறான்

அப்புறம் தலையைப் பக்கவாட்டில் திருப்பி

முகமன் தெரிவிக்கிறான்.

யாரோ இருக்கிறார்கள் போல

யாரும் தென்படாத இடங்களில்.

*


Comments