இழப்பின் வரலாறு



நீயும் நானும்

ஒரு மர்மமான தட்டச்சுப்பலகையில்

அருகருகே வசிக்கும்

இரண்டு எழுத்துக்களாக இருக்கிறோம்.


உன்னை அடுத்து நானோ அல்லது

என்னைத் தொடர்ந்து நீயோ

வருகைபுரிந்தால்

மொத்தமும் அர்த்தமிழந்துவிடும்.


வருத்தம்தான். வருத்தமேதான்.

இந்த முறை நாம்

இப்படிப் பிரிந்துசென்றிருக்கிறோம்

ஒருவரையொருவர்.

Comments

Post a Comment