வெறுமையின் செழிப்பு

 



எனக்கு ஏன் தெரியாமல் போயிற்று

நீரினை அருந்த நீர் அவசியமில்லையாம்

ஊழி தேக்கிய வானுக்குக் கீழே

நூற்றுக்கணக்கான வியர்வைத்துளிகளுடன் 

சற்றே நிற்கிறேன்

என் கரங்களைக் குவித்து

அள்ளியெடுக்கிறேன் வெங்காற்றில்

எங்கெல்லாம் அள்ளுகின்றேனோ

அங்கிருந்தெல்லாம் தண்ணீர்

இது போதாதா ?

இனிதான் நடப்பேனே ?

*
நன்றி: ஓலைச்சுவடி இதழ்

Comments