ஓர் இலையுதிர் காலத்து காலை - டோபிரிசா செசாரிக்

Artist: Gurbuz Dogan Eksioglu


நான் உடையணிந்து கொண்டேன்.

பின்பு சன்னலை நோக்கிச் சென்றேன்.

வெளியே: இலையுதிர் காலம்.

என் நண்பன் உள்ளே வந்தான். அவனுடைய மேலங்கியோ நனைந்திருந்தது.

என் மொத்த அறையையும் மழையின் வாடை அடிக்கும்படிச் செய்திருந்தான்.

ஒரு "வணக்கம்" கூட சொல்லவில்லை.

உட்கார்ந்தான்.

பிறகு யோசனையில் ஆழ்ந்தவாறு

அவன் சொன்னான்: "இலையுதிர் காலம்"


அந்த வார்த்தையோ அவ்வளவு புதியதாக இருந்தது

மழைக்குப் பிறகான 

கிளையிலிருக்கும் ஆரஞ்சு போல.

*

நன்றி: Dobrisa Cesaric Poems



Comments