வெளிப்படுத்துதல்



கோடிக்கணக்காண போதிசத்துவர்கள் 
கோடிக்கணக்காண மரத்தடியில் 
உட்கார்ந்திருக்கிறார்கள்
அதிலொரு போதிசத்துவனுக்குப் 
பைத்தியம் பிடிக்கிறது
தியானத்தின் கடைசிப் படிக்கட்டை
விட்டிறங்கி
சூன்யத்தின் முதல் படிக்கட்டில்
கால் வைக்கிறான்
ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்
சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது
அத்தனை ஞானத்துடனும்
அத்தனை துயரத்துடனும்..

**

Comments