தருணங்களின் புத்தகம்
![]() |
| Artist: Billy Solitario |
1
நான் வாழாத வாழ்க்கைகளுக்குள்ளிருந்து வந்த கடிதம் போல
அதிகாலை நிலவு.
பட்டப்பகலிலும்
தன்னை மறந்து
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
நான் என் ஆசிரியர்களில் ஒருவரை கண்டடைந்துவிட்டேன்
2
காற்றிலிருந்து ஒரு சிட்டுக்குருவி
வந்தது
பிறகு
போய்விட்டது
3
மண்ணை கையில் எடுக்கிறேன்
அது சுவாசிக்கிறது,
லொக்கு லொக்கு என இருமுகிறது.
4
அந்தி வானம்—
தன் நாவால்
காயங்களை
ஒரு புலி போல நக்கிக்கொண்டிருக்கிறது.
நான் நீண்ட வரிசையில் நிற்கிறேன்
முன்னே கொசுக்களும்
மண்புழுக்களும்
நாரைகளும்
5
அப்படியொரு அசுரத்தனமான காற்று...
இந்த இடத்தில் முன்பு நடந்த ஒவ்வொன்றும்
இதே இடத்தில்
இன்னும் இருப்பது
சிறிது சிறிதாக
தெரிய ஆரம்பித்துவிடும் போல.
6
இரவு 07.23, ஒரு மின்னல் கீற்று
ஆஹா, ஆஹா, நீ என்னை இன்னும் மறக்கவில்லை போலவே.
*

Comments
Post a Comment