ஞாபகப்பூர்வமாக

Artist: Keith Jacobshagen



டிசம்பர் முடிந்துவிட்டது

என் வாழ்வின் மீது படிந்த தூசியைத் துடைத்துக்கொள்கிறேன்

பிறகு கதவைத் திறந்து

வெளியே வந்து 

ஏதோ முதல்முறையாக வானத்தைப் பார்ப்பது போல

அண்ணாந்து பார்க்கிறேன் 

நான்

மேகமாக இருந்தால்

எப்படி இருப்பேனோ

அப்படியொன்று வானில்

அவ்வளவு தொலைவு

ஆதலால் ஒரு வெண்ணிற வேதனை

தென்மூலையில்

மற்றவை யாவும்

திரண்டு

மழைப்பொழிவுக்கு என

மந்தாரமிட்டுக் கொண்டிருக்க

நான் மட்டும் 

கரைந்தபடியே 

மெல்ல நகர்ந்து கொண்டிருந்தேன்

எங்கே? 

எதற்காக?

நீண்டநாளுக்குப் பின்பு

வெளிச்சம் என்னை ஊடுருவிக் கடக்கிறது

*

Comments

  1. நவீன கவிதையின் முதல் படி இதுதான். கவிதையின்பாஷை கரைந்து , அநுபவம் முன் நிற்கிறது. ஒரு கவிதை தரும் அனுபவம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

    ReplyDelete

Post a Comment