ஒரு டிசம்பர் மாலைப்பொழுது




காற்றடித்தால்

உயரத்திலிருந்து

சிணுங்கிச் சிணுங்கி

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் னத் 

தெரிவிக்கும்

இந்த உலோகக் கிண் கிணிகளை

நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று

இப்போது பார்

காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும்

வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும்

மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு

சோகம்தான். . .

 *


Comments

Post a Comment